திண்டிவனம்:
திண்டிவனத்தை அடுத்த மரக்காணம் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்சிவிரி மற்றும் வடஆலப்பாக்கம் ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கீழ்சிவிரி மற்றும் வடஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அனைத்து இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக இணைப்பதென முடிவு செய்யப்பட்டது. இரு ஊராட்சிகளிலும் மாநில துணைத் தலைவர் ந.ம.கருணாநிதி மாவட்டச் செயலர் ச.இ.ஏழுமலை சிறப்புரையாற்றினர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் கிளைச் செயலர் தனசேகர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகரச் செயலர் மலர்சேகர் மற்றும் ஒன்றியச் செயலர் நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக