வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு






பெயர்: செ. குரு

பிறந்த தேதி -

நிரந்தர முகவரி:

             அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி

பிறந்த ஊர்:

               காடுவெட்டி

குடும்பம் மனைவி:

             சொர்ணலதா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். குருவின் தந்தை ஜெயராமன், தாய் கல்யாணி.

கல்வி:

             பி. யூ. சி

வேலை:

           வன்னியர் சங்க தலைவர்


           அரசியல் அனுபவம் 1996 மற்றும் 2006 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒன்றிய செயலாளர்.

                 சமுக சேவை வன்னியர் கல்வி அறக்கட்டளை செயலாளராகவும் இருந்து வருகிறார்.


                  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைய தலைமுறை தலைவர்களில் நம்பிக்கை நட்சத்திரமான குரு, அக்கட்சியின் சார்பில் இம்முறை திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். நாற்பத்தேழு வயதாகும் குரு மாநில வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார்.

             அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குரு காட்சிக்கு எளியவர். வெள்ளந்தியான சுபாவம் கொண்டவர். தொண்டர்களோடும், மக்களோடும் நெருங்கிப் பழகக் கூடியவர். அரசியலில் முதுகலைப்பட்டம் படித்தவர். அளவான குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை என்று வாழும் குரு கட்சி அறிவித்தப் போராட்டங்களில் போர் மனப்பான்மையோடு கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். கட்சியினர் இவரை ‘மாவீரன்’ என்று பெருமிதமாக குறிப்பிடுகிறார்கள். தமிழுணர்வு மிக்கவர்.

                 வீராணம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் அப்பகுதியில் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்படும் என்ற சூழலில் அப்பிரச்சினைக்காக களமிறங்கி, போராடி சிறைக்குச் சென்றார். கட்சித் தொடர்பான போராட்டங்கள் மற்றும் மறியல்களில் குருவின் ‘கை’ இல்லாமல் இருந்ததே இல்லை. சமீபத்தில் இவர்மீது அரசியல் காரணங்களால் தேசியபாதுகாப்புச் சட்டம் பாய்ந்து ஐந்து மாதம் சிறையில் வாடியபோது அகில இந்திய அளவிலும் குருவின் பெயர் பிரபலமடைந்தது. தீவிரமான போராளி என்பதால் பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸின் செல்லப்பிள்ளை.

                     2001 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டு வென்றபோது இவர் சிறந்த நிர்வாகியும் கூட என்பது நிரூபணமானது. தொகுதியில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டிட வசதி செய்து தந்தது, நூற்றுக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்தது, அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி அமைத்து தந்தது, கிராம செம்மண் சாலைகளை தார்சாலையாக மாற்றியது, உட்சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றியது என்று ஆண்டிமடத் தொகுதியில் குருவின் சாதனைகள் ஏராளம்.

                 அவ்வப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்து மத்திய, மாநில அரசுகளை தொடர்புகொண்டு நிவர்த்தி செய்து வைத்ததால் தொகுதி மக்களிடையே ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டார். அரசு உதவித் தொகையினை தகுதியானவர்களுக்கு பெற்றுத் தருவதற்கு எப்போதுமே முன்னுரிமை தருவார்.








0 கருத்துகள்: