என்எல்சி நிறுவன நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை:புவனகிரி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன்

சிதம்பரம்:

              நெய்வேலி 3-வது அனல் மின்நிலைய விரிவாக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன் தெரிவித்தார்.  

இது குறித்து புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன்   தெரிவித்தது: 

                   என்னை உறுப்பினராக தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் தொகுதியின் அடிப்படை முக்கிய பிரச்னைகளை முன்னின்று செயல்படுத்துவேன்.  ÷இத்தொகுதியின் மிகப்பெரிய ஏரியாக கருதப்படும் வாலாஜா ஏரியை ஆழப்படுத்தி, தடுப்பணைகளை உயர்த்தி வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமித்து 11,400 ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண் நிலங்கள் பாசன பெற நடவடிக்கை மேற்கொள்வேன்.  

                 ஆண்டுதோறும் பரவனாற்றில் ஏற்படும் உடைப்பினால் எல்லைக்குடி, குமுடிமூலை உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பரவனாற்றை தூர்வாரி, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்.  ÷சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன். விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.  

                  சேத்தியாத்தோப்பை மையமாக கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.  தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். வறுமையில் வாழும் தொகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனையையும், ஆதரவையும் பெற்று நிறைவேற்றுவேன் என த.அறிவுச்செல்வன் தெரிவித்தார்.  அரசியல் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலர் வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் சேரலாதன், குருசேவ் ஆகியோர் உடனிருந்தனர்.

2 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தொப்புளில் பம்பரம் விட்ட நடிகர் பாமகவை குறை கூறியுள்ளான். இந்த நடிகருக்கு தொகுதி மக்கள் யாராவது ஆங்கிலத்தில் மனு கொடுத்தால் படிக்க தெரியுமா ? இல்லை அர்த்தம் தான் சொல்ல தெரியுமா?. இட ஒதுக்கீடு என்றால் என்னவென்று தெரியுமா ? தியாகம் என்றால் என்னவென்று தெரியுமா ? மக்கள் பிரச்சினைக்காகவும், உரிமைக்காகவும் தெருவிலும், அரசு அலுவலகங்கள் முன் போராட தெரியுமா? மக்கள் முன்னேற்றதிர்க்கு நல்ல அறிவுரைதான் சொல்ல தெரியுமா. இந்த கூத்தாடிக்கு அரசியல் சாசனம் பற்றித்தான் தெரியுமா? சமுதாயம் என்றால் என்னவென்று தெரியுமா? "சின்ன கவுண்டர்" என்ற சமுதாயம் சார்ந்த படத்தில் "வக்கிரமாக" பெண்ணின் தொப்புளில் பம்பரம் விட்ட நடிகரை தமிழ்நாட்டு பெண்கள் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக "கவுண்டர்" என்ற சாதி அடைமொழி கொண்ட கொங்கு வெள்ளாளர் மற்றும் வன்னியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இந்த காட்சியை ஆபாச படத்தில் காட்ட வேண்டியதுதானே?. அப்போ தமிழ் பண்பாட்டை கெடுப்பதுதானே இந்த தெலுங்கனின் குறிக்கோள். விருத்தாசலம் தொகுதியில் மக்களுக்கு எதுவும் செய்யாத இவன் ரிஷிவந்தியம் தொகுதியில் நிற்கிறான். எனவே இந்த தொகுதி மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். விருத்தாசலம் தொகுதி மக்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் 2.5 கோடி வன்னியர்களும் டாக்டர் அய்யாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

dakaraidakila சொன்னது…

தொப்புளில் பம்பரம் விட்ட நடிகர் பாமகவை குறை கூறியுள்ளான். இந்த நடிகருக்கு தொகுதி மக்கள் யாராவது ஆங்கிலத்தில் மனு கொடுத்தால் படிக்க தெரியுமா ? இல்லை அர்த்தம் தான் சொல்ல தெரியுமா?. இட ஒதுக்கீடு என்றால் என்னவென்று தெரியுமா ? தியாகம் என்றால் என்னவென்று தெரியுமா ? மக்கள் பிரச்சினைக்காகவும், உரிமைக்காகவும் தெருவிலும், அரசு அலுவலகங்கள் முன் போராட தெரியுமா? மக்கள் முன்னேற்றதிர்க்கு நல்ல அறிவுரைதான் சொல்ல தெரியுமா. இந்த கூத்தாடிக்கு அரசியல் சாசனம் பற்றித்தான் தெரியுமா? சமுதாயம் என்றால் என்னவென்று தெரியுமா? "சின்ன கவுண்டர்" என்ற சமுதாயம் சார்ந்த படத்தில் "வக்கிரமாக" பெண்ணின் தொப்புளில் பம்பரம் விட்ட நடிகரை தமிழ்நாட்டு பெண்கள் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக "கவுண்டர்" என்ற சாதி அடைமொழி கொண்ட கொங்கு வெள்ளாளர் மற்றும் வன்னியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இந்த காட்சியை ஆபாச படத்தில் காட்ட வேண்டியதுதானே?. அப்போ தமிழ் பண்பாட்டை கெடுப்பதுதானே இந்த தெலுங்கனின் குறிக்கோள். விருத்தாசலம் தொகுதியில் மக்களுக்கு எதுவும் செய்யாத இவன் ரிஷிவந்தியம் தொகுதியில் நிற்கிறான். எனவே இந்த தொகுதி மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். விருத்தாசலம் தொகுதி மக்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் 2.5 கோடி வன்னியர்களும் டாக்டர் அய்யாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.