
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இக்கட்டிடத்தை ஜெயங்கொண்டம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காடுவெட்டி ஜெ.குரு திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய ஜெயங்கொண்டம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெ.குரு,
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஜெயங்கொண்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், புறவழிச்சாலை அமைத்தல், ஏரிகளை தூர்வாரி அசுத்த நீர் கலக்காமல் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க கோருதல், பொன்னாற்றை ஆழப்படுத்தி பொன்னாற்றில் இருந்து பொன்னேரிக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்து தொடர்ந்து பாசனத்திற்கு வழிவகை செய்யப்படும் அணைக்கரையில் புதிய பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதனத்தூர் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்காக சிறந்த சுற்றுலா விடுதி மற்றும் பூங்கா வசதிகள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோருதல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பேசியுள்ளேன். இதனை முதல்வர் ஜெயலலிதா செய்து தருவார் என்று நம்புகிறோம். இவ்வாறு ஜெ.குரு கூறினார்.
மதனத்தூர் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்காக சிறந்த சுற்றுலா விடுதி மற்றும் பூங்கா வசதிகள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோருதல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பேசியுள்ளேன். இதனை முதல்வர் ஜெயலலிதா செய்து தருவார் என்று நம்புகிறோம். இவ்வாறு ஜெ.குரு கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக