பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை: தமிழக அரசின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது , ராமதாஸ்


         பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 

          மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு, தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்வது தொடர்பான எல்லா வினாக்களுக்கும் கருத்து கூற விரும்பவில்லை என்றும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர்கள் மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

   இது தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் 3 தமிழர்களையும் காப்பாற்றுவதில் முதல்வருக்கு அக்கறை இல்லை என்பதும், மக்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெயரளவில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார் என்பதும் அம்பலமாகியிருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


0 கருத்துகள்: