மாற்று கட்சியில் இணையும் எண்ணம் இல்லை : தி.வேல்முருகன் அறிவிப்பு

             முறையான காரணம் இன்றி முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.   இந்த தகவல் வெளியானதை அடுத்து கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில்  ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கட்சி அலுவலகம், நெய்வேலியில் உள்ள பா.ம.க. தொழிற்சங்க அலுவலகம் சூறையாடப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க. கொடிக்கம்பங்களை அகற்றினார்கள். இந்த நிலையில் பா.ம.க. வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் தி.மு.க.வில் சேரப்போவதாக கடலூர் பகுதியில் நேற்று தகவல் பரவியது. 

இதுபற்றி வேல்முருகன் கூறியது
 
            வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போதும் பா.ம.க. வில் தான் இருக்கிறேன். நான் நீக்கப்பட்டதாக கூறப்பட்டிருப்பது பற்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ம.க. தொண்டர்களிடம் நீதி கேட்பேன். நான் நீக்கப்பட்டது சம்பந்தமாக இதுவரையிலும் எனக்கு எந்த தகவலும் முறைப்படி அனுப்பப்பட வில்லை. அப்படி ஒரு தகவல் வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் முடிவு செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை: தமிழக அரசின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது , ராமதாஸ்


         பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 

          மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு, தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்வது தொடர்பான எல்லா வினாக்களுக்கும் கருத்து கூற விரும்பவில்லை என்றும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர்கள் மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

   இது தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் 3 தமிழர்களையும் காப்பாற்றுவதில் முதல்வருக்கு அக்கறை இல்லை என்பதும், மக்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெயரளவில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார் என்பதும் அம்பலமாகியிருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


கடலூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தல்: பா.ம.க ஒரு இடத்தில் வெற்றி

கடலூர் :

          கடலூர் மாவட்டத்தில்  மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பா.ம.க ஒரு இடத்தில் வெற்றி பெற்றார் .

பா.ம.க.,:  

வார்டு எண்: 26
வேட்பாளர் : கருணாகரன், 
ஓட்டுகள்: 8,676;  

ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்

சிதம்பரம் நகராட்சியில் 4வது முறையாக பா.ம.க.வேட்பாளர் ரமேஷ் வெற்றி

சிதம்பரம் :

          சிதம்பரம் நகராட்சியில் 4வது முறையாக பா.ம.க., வைச் சேர்ந்த ரமேஷ், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். சிதம்பரம் நகர மன்றத்தில் 1996 தேர்தலில் பா.ம.க., சார்பில் 14வது வார்டில் பா.ம.க.,வைச் சேர்ந்த ரமேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
           இதில் பா.ம.க., ரமேஷ் தொடர்ந்து 1996, 2001, 2006, தற்போதைய (2011) தேர்தலிலும் வெற்றி பெற்று தற்போது 4வது முறையாகவும் வெற்றி பெற்று கவுன்சிலர் பதவியை பிடித்துள்ளார். நான்கு முறையாக ஒரே வார்டில் நின்று வெற்றி பெற்று வார்டை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார்.
 

ஜெயங்கொண்டம் நகராட்சியில் பா.ம.க. 3 வார்டுகளில் வெற்றி


ஜெயங்கொண்டம்: 

         ஜெயங்கொண்டம் நகராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மீனாள் சந்திரசேகர் 6,429 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

                இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க., வேட்பாளர் லெட்சுமிகாந்தன் 5,952 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். பா.ம.க., சார்பில் போட்டியிட்ட ஆர்.லட்சுமி 2,194 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கலைவாணி 548 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.

மொத்தமுள்ள 21 வார்டுகளில் 

அ.தி.மு.க., 8 வார்டுகளிலும்,
தி.மு.க., பா.ம.க., தலா 3 வார்டுகளிலும், 
காங்கிரஸ் ஒரு வார்டிலும்,
சுயேட்சை வேட்பாளர்கள் 6 வார்டுகளிலும் 

வெற்றி பெற்றுள்ளனர்.

பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவி பா.ம.க வேட்பாளர் க.சிவக்குமார் மூன்றாமிடம்

பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் க.முருகன் வெற்றி பெற்றுள்ளார்.
 
வாக்குகள் விவரம்: 
 
க.முருகன் (திமுக)-2,553, 
இரா.ராஜா (அதிமுக)-1,922, 
க.சிவக்குமார் (பாமக)-1,323, 
ந.குமரவேல் (தேமுதிக)-258, 
அ.ஆஜம்கான் (சுயே)-841, 
ரா.சீனிவாசன் (காங்கிரஸ்)-54.
 
மொத்தமுள்ள 15 வார்டுகளில் 
அதிமுக-5, 
பாமக-4, 
திமுக-2, 
தேமுதிக-2, சு
யே-2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.