திண்டிவனம்:
திண்டிவனத்தை அடுத்த மரக்காணம் ஒன்றியம் வன்னிப்பேர் ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிளைச் செயலர் ரா.மணிகண்டன் தலைமை வகித்தார். கிளை தலைவர் கண்ணப்ப நயினார் வரவேற்றார். வன்னிப்பேர் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலர் ஏழுமலை, ஒன்றியச் செயலர் நடராஜன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். வன்னிப்பேர் பகுதியில் உள்ள இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை கட்சியில் உறுப்பினர்களாக பதிவுசெய்து அவர்களை கட்சியில் இணைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக