அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
வரும் சட்டசபை தேர்தலில் காடுவெட்டி குரு, ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதால், இந்த தொகுதி பிரச்சாரத்துக்கு அவர் வரமாட்டார். அவரை வெற்றி பெறச்செய்வது உங்கள் கடமை. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பெண்களை கொண்டு, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டமும், அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டத்தை நானே முன்னின்று நடத்துவேன். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.
கிராமத்துக்கு வேண்டிய அடிப்படை தேவை கிடைக்க பாடுபட்டால் கட்சி வலுவாக இருக்கும். ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தை நானே முன்னின்று காடுவெட்டி குரு தலைமையில் நடத்துவேன் என்றார்.
1 கருத்துகள்:
தமிழ்நாட்டில் 2 .5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பல ஊர்களில் / ஒன்றியங்களில் வன்னியர்கள் இருந்தும் பாமக அறிமுகமும், தொடர்பும் இல்லாமல் இன்னும் உள்ளது. குறிப்பாக நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 20% வன்னியர்கள் பெரும்பாலான கிராமங்கள், ஒன்றியங்களில் வசிக்கின்றனர். எனவே வன்னியர்கள் இருக்கும் அனைத்து பகுதிகளையும் இடம் கண்டறிந்து பாமகவுக்கு ஆதரவு திரட்டனும். ஒரு வன்னியர் ஓட்டு கூட சிதற கூடாது. டாக்டர் அய்யா ஒருமுறை இந்த மாவட்டங்களில் வலம் வந்து ஆதரவு திரட்டனும்.. அவ்வாறு செய்தல் தமிழ்நாட்டில் பாமக 100 தொகுதிகளில் வெற்றி பெரும். திருச்சி , தஞ்சை , திருவாரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கணிசமாக வன்னியர்கள் உள்ளனர்.
கருத்துரையிடுக