தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மூட வேண்டும் ; பாமக மாணவர் சங்கம்

வேலூர்:
 
              வேலூர் மாவட்டம், அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாமக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் மூதூரில் நடந்தது.  இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் சங்க செயலாளர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

               தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அடுத்த மாதம் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷனர் அறிவித்த நாள் முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். டாஸ்மாக் திறந்திருந்தால் தேர்தலின் போது பல தகராறுகள் ஏற்படும்.  இதனால் சட்டம் ஒழுங்கு கெடும். மக்கள் அதிகமான துன்பத்திற்கு ஆளாவர். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் ஓசியில் மதுபானங்களை தரும்.

              இதனால் குடிக்காதவர்கள் கூட அப்பழக்கத்திற்கு ஆளாவார்கள். அதனால் தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றார். அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளனர்.

0 கருத்துகள்: