கடலூர் :
புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் உட்பட ஐந்து பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். புவனகிரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி கல்யாணத்திடம் நேற்று மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக சாத்தமங்கலம் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இதேதொகுதிக்கு லோக் ஜனசக்தி சார்பில் சிதம்பரம் கமலக்கண்ணன், சுயேச்சைகளாக கம்மாபுரம் சவுந்தரராஜன், கீரப்பாளையம் முருகன் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதுவரை இத்தொகுதியில் ஐந்து பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக