காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம்: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ப்பு

காஞ்சிபுரம்:
 
          திமுக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதும் 5 ஆண்டுகள் பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

                காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்படி திமுக மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்,

                    திமுக அரசின் சாதனைகளும், தேர்தல் அறிக்கையுமே 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்கும். திமுக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதும் 5 ஆண்டுகள் பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றார்.

0 கருத்துகள்: