ரிஷிவந்தியம் :
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் வாங்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். விழுப்புரத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பொன்முடி அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதாவது எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் டெபாசிட் வாங்க கூடாது.
இதேபோல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிவராஜ் அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. இதேபோல் வானூர் தொகுதியில் புஷ்பராஜ், உளுந்தூர் பேட்டையில் முகமது யூசப், கள்ளக்குறிச்சியில் பாவரசு, விக்கிரவாண்டியில் ராதாமணி, சங்கராபுரத்தில் உதயசூரியன் ஆகியோர் வெற்றி பெற வேண்டும். இதற்கு பாமக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

2 கருத்துகள்:
மக்கள் மனசாட்சிபடியும், திமுக ஆட்சியின் ஒவ்வொரு மக்கள் நல திட்டங்களையும் எண்ணிப்பார்த்து வாக்கு அளித்தால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெரும். மக்கள் தங்கள் நன்றிக்கடனை வாக்குகளாக செலுத்தனும். நேற்று முளைத்த காளான் (நடிகர் கட்சி) , ஆலமரத்தை (பாமக) பார்த்து கொக்கரிக்கிறது. இதை 2.5 கோடி பாட்டாளி சொந்தங்கள் கிள்ளி எறியணும். டாக்டர் அய்யாவின் கரத்தை வலுபடுத்த வேண்டும். நடிகர் கட்சியில் உள்ளவர்கள் வெறும் சினிமா பித்து பிடித்தவர்களும், குடிகாரர்களும் தான். படித்தவர்கள், பண்பாளர்கள் இல்லை.
'பம்பரம்' புகழ் நடிகருக்கு தமிழக பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் இவர் தொப்புளில் பம்பரம் விட்டவர். வேட்பாளரை அடித்தவர். மேலும் குடிப்பழக்கம் கூடாது என்று தமிழக மக்களுக்கோ, தனது கட்சியினருக்கோ இதுவரை சொன்னதில்லை. மக்கள் நலனுக்காகவும், பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்தவில்லை. விருதாச்சலத்தை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சொல்லி ஏமாற்றியவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை.
கருத்துரையிடுக