புவனகிரி:
தி.மு.க. கூட்டணியில் புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளராக அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புவனகிரி அண்ணாசிலை அருகில் பிரசாரம் செய்து அறிவுச்செல்வனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது:-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 2 இயக்கங்களும் இப்படி இணையும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஒரு சமூக நல்லிணக்கத்தோடு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் ஒரே அணியில் இடம் பிடிக்கும் இந்த அரிய வாய்ப்பை நனவாக்கி தந்தவர் நம் தமிழக முதல்வர்.
சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நல்ல தலைவர். அந்த நல்ல தலைவராக கருணாநிதி விளங்குகிறார். இந்த ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும். இதில் எந்த மோதலும், சிக்கலும் வரக்கூடாது. குடிசைகளில் வாழ்பவர்களில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும்தான் அதிகம். கருணாநிதியின் கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் மீண்டும் 6-வது முறையாக கருணாநிதி முதல்வராக வரவேண்டும்.கடந்த கால கசப்புகளை மறந்து, நிகழ் காலத்தில் நாம் கை கோர்த்து, எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க. புவனகிரி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் மதியழகன், நகர செயலாளர் கந்தன், நிர்வாகிகள் அமுதராணி, ராமன், பன்னீர்செல்வம், முத்து, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் குமார், ஒன்றிய குழுத் தலைவர் தனலட்சுமி கலைவாணன், நிர்வாகிகள் பழனிசாமி, சவுந்திரபாண்டியன், பன்னீர் செல்வம், செல்வராஜ், சிவக்குமார், கிருஷ்ணன், பா.ம.க. நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், வேல்முருகன், முத்துகுமார், சரவணன், மனோகரன், ரவிச்சந்திரன், குருசேவ், காசிநாதன், சுரேஷ், மணிமாறன், கர்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் செல்லப்பன், கதிரவன், சுதாகர், செந்தில், மோகன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 2 இயக்கங்களும் இப்படி இணையும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஒரு சமூக நல்லிணக்கத்தோடு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் ஒரே அணியில் இடம் பிடிக்கும் இந்த அரிய வாய்ப்பை நனவாக்கி தந்தவர் நம் தமிழக முதல்வர்.
சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நல்ல தலைவர். அந்த நல்ல தலைவராக கருணாநிதி விளங்குகிறார். இந்த ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும். இதில் எந்த மோதலும், சிக்கலும் வரக்கூடாது. குடிசைகளில் வாழ்பவர்களில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும்தான் அதிகம். கருணாநிதியின் கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் மீண்டும் 6-வது முறையாக கருணாநிதி முதல்வராக வரவேண்டும்.கடந்த கால கசப்புகளை மறந்து, நிகழ் காலத்தில் நாம் கை கோர்த்து, எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க. புவனகிரி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் மதியழகன், நகர செயலாளர் கந்தன், நிர்வாகிகள் அமுதராணி, ராமன், பன்னீர்செல்வம், முத்து, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் குமார், ஒன்றிய குழுத் தலைவர் தனலட்சுமி கலைவாணன், நிர்வாகிகள் பழனிசாமி, சவுந்திரபாண்டியன், பன்னீர் செல்வம், செல்வராஜ், சிவக்குமார், கிருஷ்ணன், பா.ம.க. நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், வேல்முருகன், முத்துகுமார், சரவணன், மனோகரன், ரவிச்சந்திரன், குருசேவ், காசிநாதன், சுரேஷ், மணிமாறன், கர்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் செல்லப்பன், கதிரவன், சுதாகர், செந்தில், மோகன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக