மயிலம் தொகுதி பா.ம.க வேட்பாளர் இ.ரா.பிரகாஷை ஆதரித்து வல்லத்தில்அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்


நலத்திட்டங்கள் தொடர  

கருணாநிதி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும்; 

முன்னாள் மத்திய மந்திரி அன்பு மணி பிரசாரம் 



மயிலம் :

      மயிலம் தொகுதி பா.ம.க வேட்பாளர் பிரகாசை ஆதரித்து வல்லத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி பேசினார். 
அப்போது  அன்புமணி கூறியது:-



             கலைஞர், சோனியா காந்தி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், ஆகியோரது கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி சமூக நீதிக்காக ஏற்பட்ட கூட்டணி. இங்கே போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் இதே தொகுதியை சேர்ந்த கீழ்மாம்பட்டை சேர்ந்தவர். பிரகாஷ் வெற்றி பெற மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள்.


              கலைஞர் திட்டங்களான ஒரு ரூபாய்க்கு அரிசி, 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடரவேண்டுமானால் கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல் அமைச்சராக வேண்டும். எனவே இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாசை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


             கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கே.மூர்த்தி, மற்றும் கண்ணன் எம்எல்ஏ, விவசாய மைய மாநில தலைவர் சடகோபன், மாவட்ட செயலர் மணிமாறன், ஓன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, வேல்முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசுந்தரா தேவி, சேட்டு, வக்கீல் ராஜேந்திரன், இளம் வழுதி, மாவட்ட இளைஞர் அணி சிட்டிபாபு, கன்னியப்பன், மாரி, தனஞ்செழியன், ஸ்ரீதர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: