மயிலம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் வாக்கு சேகரிப்பு

 
வல்லம் பகுதியில் பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் தீவிர வாக்கு சேகரிப்பு




செஞ்சி:
         வல்லம் பகுதியில் மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் வாக்கு சேகரித்தார். மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். இவர், வல்லம் ஒன்றிய கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.


             நாட்டார் மங்கலம், மேல்சித்தாமூர், வல்லம், கொங்காப்பட்டு, தென்புத்தூர், தளவாளப் பட்டு, நாகந்தூர், மரூர் மேல்சேவூர், ஈச்சூர், கல்லேரி, செங்கமேடு, மணியம்பட்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மேளதாளத்துடனும், பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தனர். 
          ஓட்டுவேட்டையில் தி.மு.க. ஒன்றிய செயலர் அண்ணாதுரை, நிர்வாகிகள் இளம்வழுதி, ராஜகோபால், துரை, பா.ம.க. மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசுந்தராதேவி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீதர், சுப்பிரமணி, நாராயணசாமி, மாவட்ட கவுன்சிலர் மனோகரன், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: