பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற போரின்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களிளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததற்காக இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம் அளித்த இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது.
இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டுடு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.
இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை கொண்ட இந்திய அரசு மட்டும் இலங்கை அதிபரையும், அந்நாட்டு தலைவர்களையும் மாதத்திற்கு ஒருமுறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழத்திற்கு வந்தபோது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்ப்பட்டனர்.
ஆனால், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இந்திய அரசு வரவேற்று உபசரிப்பது தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கொலைக்குற்றம் சாற்றப்பட்ட சிங்களத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, ராஜபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
1 கருத்துகள்:
ஒரு அரசின் கடமை மக்களுக்கு இலவசமாக தரவேண்டியது கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வேளாண்மை உற்பத்தி பொருட்கள். ஆனால் வெறும் ஓட்டுக்காக இலவசம் என்ற பெயரில் கண் கட்டி வித்தை காண்பித்து மக்களை ஏமாற்ற முடியாது. மீனை தருவதை விட பிடிக்க கற்று கொடுப்பதுதான் சிறந்த அரசு. கல்வி என்ற பெயரில் தனியார் பள்ளிகள் கொள்ளையடிகின்றனர். இதை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரணும். காலியாக உள்ள அரசு பணி இடங்களை நிரப்புவதும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமைவது காலத்தின் கட்டாயம். இதை அரசு செய்ய வேண்டும். அம்பானிக்கு கிடைக்கும் அதே மருத்துவம், உயர் சிகிச்சை அனைத்து ஏழை மக்களுக்கும் கிடைக்கணும். "கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" . எனவே வேளாண்மையில் தன்னிறைவு பெற வேளாண் சார்ந்த விதைகள், பொருட்கள், சொட்டு நீர் பாசனம் இலவசமாக தரலாம். மது, போதை பொருட்கள் போன்ற அரக்கனை ஒழிக்கவும், அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது, கட்டாய கல்வி, பெண்கள் முன்னேற்றம் , வரதட்சணை ஒழிப்பு & சமஉரிமை, போதை பொருள் ஒழிப்பு, சினிமா ஆபாசம், சினிமாவில் மயங்கியுள்ள இளைஞர்களை சீராக்குவது, கிரிக்கெட் சூதாட்ட ஒழிப்பு, வன்முறை& தீவிரவாதம் ஒழிப்பு. இவற்றை பாமக மட்டுமே நிறைவேற்ற முடியும். வேறு எந்த கட்சியாலும் நிறைவேற்ற முடியாது. ஏன் அவர்களால் பேசக்கூட முடியாது. முடிந்தால் இதை செய்யுங்கள். இல்லாவிடில் ஆட்சி அதிகாரத்தை ஒரு வருடம் பாமகவுக்கு கொடுங்கள். இவற்றை நிறைவேற்றும் சக்தி, வல்லமை கொண்டது பாமக மட்டும்தான் . வேறு எந்த ஆண்ட கட்சிக்கும் வல்லமை இல்லை. பாமக ஆட்சிக்கு வரவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
கருத்துரையிடுக