திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

       

http://www.sivajitv.com/newsphotos/Ramadoss%20Reading%20book.jpg
      
         திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் (21.08.2011) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

           மது, திரைப்பட மோகம் ஆகிய கலாச்சார சீரழிவுகளில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும். 44 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இலவச திட்டங்களை முற்றிலும் நிறுத்தி விட்டு, மேல்படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.  பாமக தலைமையிலான அணி உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும். அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாமக அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்: