வருகிற தேர்தலில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் என்று ராமநத்தத்தில் நடந்த பா.ம.க பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
மங்களூர் ஒன்றிய பா.ம.க. பொதுக் குழு கூட்டம் ராமநத்தத்தில் நடந்தது. மாநில சொத்து பாதுகாப்பு குழுதலைவர் கோவிந்தசாமி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தனபால், துணை பொது செயலாளர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர் செல்வராசு, மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மோகன், மாவட்ட துணை செயலாளர் தங்ககொளஞ்சிநாதன், செயற்குழு உறுப்பினர் குழந்தைவேல், கொள்கை விளக்க செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
அவை வருமாறு:
**கூட்டத்தில் மாநில இளைஞரணிதலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும்.
**திராவிட கட்சி களின் தலைமையில் இயங்குவதை விட்டுவிட்டு பா.ம.க. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கட்சியாக செயல்படும் என்ற செயல்பாட்டிற்கு வரவேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக