தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் பிரச்சனைகளை மறந்துவிட்டார்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

        மக்கள் பிரச்சனைகளுக்காக போராடாமல் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தூங்குகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி

            சமச்சீர் கல்வி, சட்டப்பேரவை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இப்பிரச்சனையில் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்படவில்லை. தூங்குகிறார் என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிட்டார். எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாமல், போராட்டமும் நடத்தாமல் அந்த கட்சி தூங்கிக்கொண்டிருக்கிறது. எவ்வளவோ மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது. அறிக்கை விட்டாரா, போராடினாரா. அவரைப் பற்றி மக்கள் புரிந்துகொண்டார்கள் என்றார்.

0 கருத்துகள்: