திட்டக்குடி :
இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக தர நடவடிக்கை வேண்டும் என பா.ம.க., வலியுறுத்தியுள்ளது.
பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலர் திருமால்வளவன், தேர்தல் பணிக்குழு தலைவர் தனபால், வன்னியர் சங்க துணைத் தலைவர் மோகன், திருஞானம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் தங்கவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் அம்பிகா சர்க்கரை ஆலை 2011ம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை கால தாமதம் செய்யாமல் உடனே வழங்க கேட்டுக் கொள்வது,
நடப்பாண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு 3ஆயிரம் ரூபாய் வழங்க கேட்பது.
ராஜிவ் கொலை வழக்கில் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக