பசுமைத் தாயகம் சார்பில் சமச்சீர்க் கல்வி: அடுத்தது என்ன? என்ற தலைப்பில் கருத்தரங்கம்: சௌமியா அன்புமணி தலைமை தாங்குகிறார்

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

             சமச்சீர்க் கல்வி: அடுத்தது என்ன? என்ற தலைப்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னையில் 25.08.2011 அன்று சென்னை தியாகராயர் நகரிலுள்ள சர்.பிட்டிதியாகராயர் அரங்கில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

             பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.  இக்கருத்தரங்கில் உண்மையான சமச்சீர்க் கல்வியை எட்ட ஆக்கப்பூர்வமான பல செயல் திட்டங்கள் முன்வைக்கப்பட உள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்: