விருத்தாசலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம்

விருத்தாசலம் : 

             மங்கலம்பேட்டை அரசு மகளிர் விடுதி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.

             விருத்தாசலத்தில் பா.ம.க., ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாநில சொத்து பாதுகாப்பு குழு செயலர் டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன், மாவட்டச் செயலர் செல்வராசு, திருஞானம், ஒன்றிய செயலர் ராஜவேல் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் வெங்கடேசன் வரவேற்றார். 

            கூட்டத்தில் அம்பிகா மற்றும் ஆரூரான் சர்க்கரை ஆலைகள் 2011ம் ஆண்டிற்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை காலதாமதப்படுத்தாமல் உடனே வழங்க கேட்டு கொள்வது. 

           எறுமனூர் - மங்கலம்பேட்டை வரை தார் சாலையை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலைத் துறையை கேட்டுக் கொள்வது. 

             மங்கலம்பேட்டை அரசு மகளிர் விடுதி அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

                ஒன்றியத் தலைவர்கள் பாலமுருகன், பூமாலை, மாவட்ட பொருளாளர் பவுனாம்பாள், கலியபெருமாள், குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: