நெல்லிக்குப்பம் அருகே பா.ம.க.,கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய தே.மு.தி.க.பிரமுகர் மீது வழக்கு பதிவு

நெல்லிக்குப்பம் : 

          பா.ம.க., கொடிக்கம்பத்தை சேதபடுத்திய தே.மு.தி.க., பிரமுகரை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்த தே.மு.தி.க., பிரமுகர் பாண்டியன். இவர் இப்பகுதியில் எங்கள் கட்சி கொடிக்கம்பம் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கூறி அங்கிருந்த பா.ம.க., கொடிக் கம்பத்தை சேதபடுத்தினார். தடுக்க வந்த பா.ம.க., பிரமுகர் ஜெயராமனையும் தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பாண்டியனை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்: