பசுமை தாயம் சார்பில் சமச்சீர் கல்விL அடுத்தது என்ன என்ற தலைப்பில் கருத்தரங்கம்

 
http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/e3143948-c521-4782-84ba-c1b1442f5fd5_S_secvpf.gif
 
 http://www.dinamani.com/Images/article/2011/8/26/25ramadas.jpg
 
சென்னை:

               சமச்சீர் கல்விக்கு அடுத்து என்ன? என்ற தலைப்பில் பசுமைத் தாயகம் சார்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. சவுமியா அன்புணி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி வரவேற்றார்.

          கருத்தரங்கில் முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமரன், வசந்திதேவி, கல்வியாளர் ராஜகோபால், ஜி.கே.மணி, வக்கீல் பானு ஆகியோர் பேசினார்கள்.  
 
கருத்தரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது

              சமச்சீர் கல்வியின் ஒரு பகுதியாக பொதுப்பாடத்திட்டம் வந்துள்ளது. அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 33 சதவீத பள்ளிகளில் பொதுக்கழிப்பிட வசதியில்லை. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளும், 529 நடுநிலைப் பள்ளிகளும் அரைகுறை கட்டிடங்களில் இயங்குகிறது.  எனவே கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த வேண்டும். மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் கல்வித் துறைகளை கலைத்து விட்டு ஒரே கல்வித்துறையின் கீழ் கொண்டு வரவேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

              கருத்தரங்கில் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் செயலாளர் அருள், துணை செயலாளர் எஸ்.கே.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: