பரமக்குடி துப்பாக்கி சூடு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

          துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

            காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டு, பின்னர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்பது கண்டனத்துக்குரியது. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யாமல் தங்கள் தவறை மறைக்க அப்பாவிகளைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்: