திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்

ஆரணி:

            திருவண்ணாமலை மாவட்ட பாமகவினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட செப்டம்பர் 7 முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், மாநில துணைப்பொதுச் செயலருமான கோ.எதிரொலிமணியன் கூறினார். 

இது குறித்து முன்னாள் எம்எல்ஏவும், மாநில துணைப்பொதுச் செயலருமான கோ.எதிரொலிமணியன் கூறியது:    

               திருவண்ணாமலையில் செப்டம்பர் 7-ம் தேதி திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், செங்கம் ஆகிய 4 தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.  

              9-ம் தேதி வந்தவாசி, செய்யாறு ஆகிய இரண்டு தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வந்தவாசி பாமக அலுவலகத்தில் மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். 

              காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மனுக்கள் விநியோகம் செய்யப்படும்.    மாலை 2 மணி அளவில் ஆரணி, போளூர் ஆகிய தொகுதிகளுக்கான மனுக்கள் பெரியகடைவீதியில் உள்ள பாமக அலுவலகத்தில் விநியோகிக்கப்படும்.

0 கருத்துகள்: