திருவண்ணாமலை:
ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் கோ.எதிரொலிமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் ம.சண்முகசுந்தரம், இரா.காளிதாஸ், மாவட்டச் செயலர் ஆர்.ஜானகிராமன், மாவட்ட இளைஞரணி செயலர் அ.வே.பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக