மதுராந்தகம் அருகே சித்தாமூர் ஒன்றியத்தில் பா.ம.க. சின்னம் இல்லாததால் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

மதுராந்தகம்:

              மதுராந்தகம் அருகே சித்தாமூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட தண்டலம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன.

           காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. காலை 10 மணி அளவில் 360 வாக்குகள் பதிவாகி விட்டன. அதன்பிறகு ஓட்டு போட சென்ற ஒருவர் ஒன்றியக்குழு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டில் பா.ம.க.வின் சின்னமான மாம்பழம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுபற்றி தேர்தல் அலுவலர்களிடம் புகார் செய்தார். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பா.ம.க. சின்னம் இல்லாததால் அங்கு உடனடியாக ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

0 கருத்துகள்: