தனி இடஒதுக்கீடு கேட்டு போராடியவர் ராமதாஸ்: காடுவெட்டி குரு பேச்சு



தனி இடஒதுக்கீடு கேட்டு போராடியவர் ராமதாஸ்:
 
 காடுவெட்டி குரு பேச்சு



விழுப்புரம்:

            விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மேல்காரணை கிராமத்தில் வன்னியர் சங்க பொதுக் கூட்டம் நடந்தது. 


கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பேசியதாவது:
 

               இந்த கூட்டம் பூம்பூகாரில் நடைபெறுகின்ற மகளிர் மாநாட்டை ஒட்டியும், தனி இடஒதுக்கீடு கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகாஅலுவலகம் முன்பு நடைபெறவுள்ள மறியலுக்கான ஆலோசனை கூட்டம். இன்னும் மாநாடு நடைபெற 60 நாட்கள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியாக இதுபோன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

                இடஒதுக்கீடு போராட்டம் நடைபெற்ற போது நமது சொந்தங்கள் 21 பேர் சுட்டுக் கொன்றது காவல்துறை. அதற்கு உறுதுணை யாக இருந்தது அ.தி.மு.க. அரசாங்கம். நாம் இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய போது எந்த அரசியல் கட்சியும் நமக்கு ஆதரவு அளிக்கவில்லை.

                 இன்றைக்கு வரை நமக்கு சமூக நீதி கிடைக்கவில்லை. இடஒதுக்கீடு கேட்டு போராடிய போது 1989-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி நம் இனத்தை சேர்த்து 107 சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுத்தார். அந்த இடஒதுக்கீடு கொடுத்து விட்டு முதல்வர் கருணாநிதி நான் உங்களுக்கு ஒரு கனி அளித்துள்ளேன். அதனை சுவைத்து பார்த்து கூறுங்கள் என்று நமது தலைவர் ராமதாசிடம் கூறினார். ஆனால் அது கனி அல்ல. அழுகிய பழம் என்று ராமதாஸ் கூறினார்.  இவ்வாறு அவர் பேசினார்.

                 முன்னதாக வன்னியர் சங்க மாநில தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க துணைச்செயலாளர் தனராசு, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மேல் காரணை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

             எம்.எல்.ஏ.க்கள் கலிவரதன், செந்தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி. தன்ராஜ், பா.ம.க. மாநில துணைத் தலைவர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர் ரவி அலெக்ஸ், மாவட்ட அமைப்பாளர் அரிகரன், தேர்தல் பணிக்குழு அம்மன் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் கன்னிகா ராமு, மாவட்ட ஊராட்சி மன்றக்குழு தலைவி வசுந்தராதேவி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் வாழ்த்தி பேசி னார்கள். முன்னதாக மேல்காரணை ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் வரவேற்று பேசினார்.


0 கருத்துகள்: