பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள்

திருச்சி:

              பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக திருச்சியைச் சேர்ந்த உ. கண்ணதாசன், துணைப் பொதுச் செயலராக க. உமாநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

புதிய நிர்வாகிகளின் விவரம்:  

               ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அமைப்புச் செயலர்- சு. கதிர்ராசா, மாநில இளைஞரணி துணைச் செயலர்- ம. பிரின்ஸ், மாநில சட்டப் பாதுகாப்புக் குழு துணைச் செயலர்- ரெ. செந்தில்குமார், மாநில தொழில்சங்க துணைச் செயலர்- வீ. குமார்.  திருச்சி மாநகர் மாவட்டச் செயலர்- பி.கே. திலீப்குமார், தலைவர்- கா. முஸ்தபா, பொருளாளர்- மஜ்ரா தசமணி. கிழக்கு மாவட்டச் செயலர்- லீமா சிவக்குமார், தலைவர்- தி. கிள்ளிவளவன், பொருளாளர்- அஞ்சலை.  மேற்கு மாவட்டச் செயலர் பெ. மனோகரன், தலைவர்- ரா. ஜான்ரஸ்கின், பொருளாளர்- கோ. ரெங்கநாயகி. தெற்கு மாவட்டச் செயலர்- சு. தியாகு, தலைவர்- இரா. அரசு ரவி, பொருளாளர்- வசந்தா மேரி.  

               மாநிலத் தலைமையின் அதிகாரப்பூர்வமான இந்தப் பட்டியலை பாட்டாளி இளைஞர் சங்க மாநிலச் செயலர் த. அறிவுச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.  வரும் 6-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வருவதாகவும் அறிவுச்செல்வன் தெரிவித்தார்.

0 கருத்துகள்: