ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமிய ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்


ஜோலார்பேட்டையில் பொன்னுசாமியை ஆதரித்து பிரசாரம்: 6-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி- டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


ஜோலார்பேட்டை:

          ஜோலார்பேட்டை தொகுதி பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமிய ஆதரித்து திருப்பத்தூர் ஆசிரியர்நகர், வக்கணமபட்டி, பொன்னேரி ஆகிய இடங்களில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் பேசியது

               6-வது முறையாக கலைஞர் ஆட்சியில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பல குடும்பங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு பல குடும்பத்தினர் பயனடைந்து உள்ளனர். எனவே தமிழகத்தில் மீண்டும் 6-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. இங்கே போட்டியிடும் ஜோலார் பேட்டை தொகுதி பா.ம.க. வேட்பாளர் பொன்னு சாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

           நிகழ்ச்சியில டி.கே.ராஜா எம்.எல்.ஏ., ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் அண்ணாதுரை, கிருபாகரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.சி.அழகிரி, இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் குட்டிமணி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: