உள்ளாட்சி தேர்தல் 2011: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ம.க. சார்பில் ஏ.கே. மூர்த்தி விருப்ப மனு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/54a95bee-e82d-4d8f-840e-816ec042536b_S_secvpf.gif
 
 
சென்னை

          சென்னை மாநகராட்சி தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்றும், நாளையும் விருப்ப மனு பெறப்படுகிறது.  

           மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் மத்திய 
  அமைச்சர் ஏ.கே. மூர்த்தி பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியிடம் விருப்ப மனு கொடுத்தார்.  கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட முத்துக்குமார், டி.கே. சேகர், சைதை சிவா, சுரேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி, ஜமுனா கேசவன், தாமோதரன், பிரேமா சக்கரபாணி, கிண்டி வேணு உள்பட பலர் மனு கொடுத்தனர்.

விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஜி.கே. மணி கூறியது:-  


           மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏ.கே. மூர்த்தி மனு தந்துள்ளார். அவர் சிறந்த மக்கள் சேவையாளர். மேயர் வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் ஆய்வு செய்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர்  ஏ.கே. மூர்த்தி  கூறியது
 
            அனைத்து வார்டுகளிலும் பா.ம.க. போட்டியிடும். நாங்கள் வெற்றி பெற்றால் சென்னை மாநகராட்சியை முன் மாதிரி மாநகராட்சியாக மாற்றுவோம் என்றார்.

0 கருத்துகள்: