கடலூர் ஒன்றிய பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்: மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன் சிறப்புரை

நெல்லிக்குப்பம் : 

            நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் வெள்ளக்கரையில் நடந்தது. தணிகாசலம் தலைமை தாங்கினார். சிவகாசி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன், சண்முகம், அமிர்தலிங்கம், பஞ்சமூர்த்தி சிறப்புரை ஆற்றினர். நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குக் கடுமையாக உழைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்: