திருக்கோவிலூர்:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகசார்பில் போட்டியிட விருப்பமனு அளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கு உள்பட்ட பாமகவினர் வரும் 9,10,11 ஆகிய தேதிகளில் விருப்ப மனு செய்யலாம் என்று கட்சியின் மாநில துணை பொதுச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.ஏ.டி.கலிவரதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில துணை பொதுச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.ஏ.டி.கலிவரதன் கூறியது;
திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிக்குட்பட்டவர்கள் 9-ம் தேதி, திருக்கோவிலூர் பயணியர் விடுதியிலும்,
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய தொகுதிக்குட்பட்டவர்கள் 10,11 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி பயணியர் விடுதியிலும் விருப்ப மனு செய்யலாம்.
கட்டண விபரம்
இதில் மாவட்டக்குழு உறுப்பினருக்கு ரூ.3,000,
ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ரூ.1,000,
ஊராட்சித் தலைவருக்கு ரூ.1,000,
பேருராட்சித் தலைவருக்கு ரூ.2,000,
பேருராட்சி உறுப்பினர்களுக்கு ரூ.500,
நகர்மன்றத் தலைவருக்கு ரூ.3,000,
நகர் மன்ற உறுப்பினருக்கு ரூ.1,000
கட்டணமாக செலுத்தி மனு செய்ய வேண்டும் என்றார்.