பா.ம.க.சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விழுப்புரம் மாவட்டதில் விருப்ப மனு

விழுப்புரம்:

            விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாமகவினர் புதன்கிழமை விருப்பமனு தாக்கல் செய்தனர்.  

             விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள பாமக நகர அலுவலகத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் பா.செந்தமிழ்ச்செல்வன் விருப்ப மனுக்களை பெற்றார். அப்போது விழுப்புரம் நகர்மன்றத் தலைவருக்கான விருப்ப மனுவை பெருமாள் தாக்கல் செய்தார்.  இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் தங்க.ஜோதி, மாவட்டச் செயலர் ப.பழனிவேல், வன்னியர் சங்க மாவட்டச் செயலர் புண்ணியகோட்டி, இளைஞர் அணி சிவக்குமார், ஒன்றிய செயலர்கள் புகழேந்தி, சம்பத், சீனிவாசன், துரை, சுரேஷ், ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: