பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

              "வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், தமிழின உணர்வாளர்கள் போன்றவர்கள், மாணவர்கள், கலைத்துறையினர், வணிகர் சங்கங்கள் போன்றவர்கள் போராடி வந்தனர்.
 
            இதை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கக்கூடியதாகும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பும், தாசில்தார் அலுவலகம் முன்பும் 5-தேதி (திங்கட்கிழமை) போராட்டம் நடைபெற உள்ளது’’ என்று  கூறியுள்ளார்.





0 கருத்துகள்: