செஞ்சியில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

செஞ்சி:

              ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை குறைக்க வலியுறுத்தி செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.பா.செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி  உரையாற்றினார். மாவட்டத் தலைவர் தங்க.சுந்தர்ராஜன், மாவட்ட அமைப்புச் செயலர் கோ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக மாவட்டச் செயலர் க.மணிமாறன் வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் செ.பி.முருகன், ஏ.ர.அய்யனார், இரா.வேல்முருகன், இரா.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: