முகையூர் ஒன்றிய பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்

திருக்கோவிலூர்:

            முகையூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அரகண்டநல்லூரில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் ஆனந்தன், சேனாதிபதி தலைமை தாங்கினார். 

               ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணி, வெங்கடேசன் வரவேற்றார். சேகர், ஞானவேல், ஆராமுது, பஞ்சமூர்த்தி, திருநாவுக்கரசு, முருகன், சங்கர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் கலிவரதன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சேர்மன் செந்தில்குமார், மாவட்ட தலைவர் செழியன், பாலசக்தி, பொருளாளர் மஞ்சுளா சிறப்புரை நிகழ்த்தினர். ஒன்றிய கவுன்சிலர் ரமணி சிவக்குமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்: