ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார்கோவில் (மேற்கு) பா.ம.க., ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நாச்சியார்பேட்டையில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வரதராஜன் வரவேற்றார். மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் ராமமூர்த்தி, வன்னியர் சங்க தலைவர் சுப்ரமணியன், ஒன்றிய துணை தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேணு.புவனேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் வெற்றிவேல் சிறப்புரையாற்றினர்.
பொதுக்குழு கூட்ட த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் அனைத்து பதவிகளுக்கும் தனித்து போட்டியிடுதல்,
ஸ்ரீமுஷ்ணத்தை தனி தாலுகாவாக அறிவிக்க கோருதல்,
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடந்துவந்த இன்டேன் கேஸ் வினியோகத்தை ஜெயங்கொண்டம் பகுதிக்கு மாற்றிதை கண்டித்தல்,
புதிய கேஸ் வினியோக மையத்ததை ஸ்ரீமுஷ்ணத்தில் அமைக்க கோருதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய துணை செயலாளர் விஜயரங்கன், ஒன்றிய துணை தலைவர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரவி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக