விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்:

             பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

           விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலர் பா.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் பா.பழனிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசுந்தராதேவி, மாநில துணைத் தலைவர் தங்க.ஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் முனியப்ப கவுண்டர், மாநில இணைச் செயலர் மா.தனராசு, மாவட்டச் செயலர் புண்ணியகோடி, பாமக நகரச் செயலர் தமிழ்செல்வன், மாவட்டத் தலைவர் துரைமுருகன், ஒன்றியச் செயலர்கள் சம்பத், சீனிவாசன், புகழேந்தி, ரத்தினம், சுரேஷ், துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: