சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு

சென்னை:

         
பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி  சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் கியோர் முன் ஜராகி முறையீடு செய்தனர்.

அப்போது வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி
கூறியது:- 

              சென்னை மாநகராட்சி தேர்தலில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதை தடுக்க மாநில தேர்தல்
ணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ளுங்கட்சிக்கு தரவாக தேர்தல் ணையாளர் சோ. அய்யர் செயல்பட்டுள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை மாநில தேர்தல் ணையம் முழுமையாக செயல்படுத்தவில்லை. கவே சோ. அய்யர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தேர்தல் ணைய செயலாளர் சேவியர் கிறிஸ்சோ நாயகர் கியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்.

            வன்முறை சம்பவங்கள் குறித்து தேர்தல்
ணையம், காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடியோ படம் எடுக்கப்படாத வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.   18 வார்டுகளில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் சம்பவம் நடந்துள்ளன. இதனால் மக்கள் பீதி அடைந்து வாக்களிக்க முன் வரவில்லை. ஆகவே ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவேண்டும். சென்னை மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் முறையிட்டனர்.  

            இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இது குறித்து மனு தாக்கல் செய்யும்படியும், அந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: