கெங்கைகொண்டான் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் க.சக்திவேலின் வெற்றி வாய்ப்பு

நெய்வேலி:

          நெய்வேலியை அடுத்துள்ள கெங்கைகொண்டான் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் இப்போதைய தலைவர் க.சக்திவேல்,  திமுக சார்பில் தற்போதைய துணைத்தலைவர் சதாசிவம், அதிமுக சார்பில் வழக்குரைஞர் மனோகர், பாஜக சார்பில் கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மார்ட்டின்,தேமுதிக சார்பில் கே.ஆனந்தன், காங்கிரஸ் சார்பில் திருஞானசம்பந்தம் மற்றும் இரு சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

             15 வார்டுகள் கொண்ட இப் பேரூராட்சியில், 6 மற்றும் 7-வது  வார்டு மக்கள், என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளால் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும் இவ்விரு  வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் இப்போதைய தலைவர் க.சக்திவேல், தனது கடந்த கால  செயல்பாடுகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்கிறார். பாமக தனித்து போட்டியிடுவதால் இளைஞர்களும்  இவருடன் சென்று தீவிர வாக்கு சேகரிக்கின்றனர்.

0 கருத்துகள்: