உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை:

           உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக வியாழக்கிழமை  பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: 

             உள்ளாட்சித் தேர்தல்களை துணை ராணுவப் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. இது பற்றிய முடிவை மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை.  உள்ளாட்சித் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 12 மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் பார்வையாளர்களாக அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு தேர்தல் பார்வையாளர்கூட வெளி மாநிலத்திலிருந்து வரவில்லை. 

             உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. எனவே, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வாக்கு எண்ணிக்கையை விடியோ பதிவு செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்வையாளர்களாக அமர்த்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: