skip to main |
skip to sidebar
திண்டுக்கல்:
வரும் அக். 19 ஆம் தேதி திண்டுக்கல் நகராட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, பா.ம.க. தனது பிரசாரத்தை முதன்முதலாக புதன் கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் நகர்மன்றத்தில் உள்ள 48 வார்டுகளுக்கும், நகர்மன்றத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப. கோபாலகிருஷ்ணனும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு 16 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வெள்ளை விநாயகர் கோவில் அருகே நகர்மன்றத் தலைவர் சுப.கோபாலகிருஷ்ணன் பிரசாரத்தைத் தொடங்கினார். கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குகளைச் சேகரித்தனர். இதில் கிழக்கு மாவட்டச் செயலாளர் பரசுராமன், நகரச் செயலாளர் சண்முகம், நகரத் தலைவர் யூசூப் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக