பழனி நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் வைரமுத்து தீவிர பிரசாரம்

பழனி:

         பழனியில் பா.ம.க சார்பில் நகர்மன்றத் தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி பிரசாரம் நடைபெற்றது. 

         பழனி நகர்மன்றத் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் வைரமுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  பழனி நகர் பகுதியில் செவ்வாக்கிழமை காந்தி மார்க்கெட் பகுதியில் துவங்கி 1,2,3,13,15 மற்றும் 20,21,22,23,24 வார்டுகளில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வைரமுத்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தார்.    

          நிகழ்ச்சியில் அவருடன் மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் ராஜரத்தினம், மல்லிகா வைரமுத்து, மகளிரணி பொருளாளர் மீனாட்சி, நகரத் தலைவர் சாகுல் ஹமீது, ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: