வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜெயராமனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்

வேளச்சேரி:

வேளச்சேரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் ஜெயராமனை ஆதரித்து, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியது: 

             ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்துள்ள விஜயகாந்த் நிதானமின்றி அடிப்பார், குடிப்பார். சினிமாவில் கதாநாயகனாக இருந்த அவர், அரசியலில் காமெடியனாக திகழ்கிறார். நான் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்ற போது, மாநகராட்சி பள்ளிகள் கல்வியில் பின்தங்கியிருந்தன. அதன் கல்வித் தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றிக் காட்டினேன். சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், 10 மேம்பாலங்கள் கட்டியுள்ளேன். தற்போது, செம்மொழிப்பூங்கா, அடையாறு பூங்கா, மழைநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பல அமைக்கப்பட்டுள்ளன.

 
                 பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அதில், தற்போது 35 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில் 52 தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. அதில், மூன்று லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் .நாங்கள் எல்லாம் உண்மையான வாரிசுகள். எங்களை தத்தெடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் வேளச்சேரி தொகுதிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கையில் உங்களிடம் ஓட்டு கேட்கிறேன்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மு.ஜெயராமனுக்கு அதரவாக ஏ.கே. மூர்த்தி பிரச்சாரம்

சென்னை:

               வேளச்சேரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் மு.ஜெயராமன் பெசன்டநகர் ஊரூர் குப்பம், கக்கன்காலனி பகுதியில் இன்று வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி பேசியது:-

               கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது. தொடர்ந்து மக்கள் நல திட்டங்கள் நிறை வேற தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள்.   பா.ம.க. வேட்பாளர்கள் உங்கள் வேலைக்காரர். இந்த தொகுதி வேட்பாளர்கள் ஜெயராமன் மண்டல குழு தலைவராக இருந்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருபவர். அவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யுங்கள்.

               மாதம் தோறும் உங்கள் பகுதிக்கு நேரில் வந்து குறைகளை கேட்டு தீர்த்து வைப்பார். என்றும் மக்கள் சேவகர்களாக பா.ம.க. உறுப்பினர்கள் வேலை செய்வார்கள். அவருக்கு நீங்கள் வாய்ப்பு அளியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

               பிரசாரத்தில் ரவி, மணி, வளவன், தமிழ்செல்வன், அரிகிருஷ்ணன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.