சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றிய பாமக நிர்வாகிகள் நியமனம்


சிதம்பரம்:

              சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றிய பாமக செயலராக சா.சந்தானகுமார், பரங்கிப்பேட்டை (தெற்கு) ஒன்றியச் செயலராக சௌ.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாநில பாமக தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜே.குரு, பாமக துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் கடலூர் (தெற்கு) மாவட்டச் செயலர் வழக்கறிஞர் வேணு. புவனேஸ்வரன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 கருத்துகள்: