அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், திமுகவைப் போலவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
திமுக தலைவர் கருணாநிதி கடந்த தேர்தலில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை, செய்திருக்கிறார். மேலும் சொல்லாததையும் செய்திருக்கிறார். ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்துள்ளது. தற்போது வெளியிட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையால் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள நபரும் பயன் அடைவார்கள். கலைஞர் ஆட்சியில் இருந்தால்தான் பல திட்டஙகள் செயல்படுத்தப்படும் என்று மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். ஆகையால் 234 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், திமுகவைப் போலவே தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக