ராணிப்பேட்டை தி.மு.க. வேட்பாளர் காந்தி, ஆற்காடு பா.ம.க. வேட்பாளர் இளவழகன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் கலையரசு ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
இதனையடுத்து விருபாட்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,
மாற்று அணி என்பது நாளுக்கு நாள் கரைந்து கொண்டு காணாமல் போய் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள ஒரு நடிகரின் தள்ளாடிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என பேசியுள்ளார்.
அதற்கு அ.தி.மு.க.வினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது ஒருகட்சி, இதுக்கு ஒரு கூட்டணி. கலைஞர் வீட்டிற்கு சென்று முதன் முதலாக நான் தான் கூட்டணி அமைத்தேன். ஒரு மணி நேரத்தில் 31 தொகுதி என முடிவாகி இருவரும் கையெழுத்திட்டோம். காங்கிரஸ் கட்சிக்காக ஒரு தொகுதியை தியாகம் செய்தோம். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மூன்றாவது பெரிய கட்சியாக பலம் பொருந்திய கூட்டணியாக திகழ்கிறது என்றார்.
இதனையடுத்து விருபாட்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,
மாற்று அணி என்பது நாளுக்கு நாள் கரைந்து கொண்டு காணாமல் போய் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள ஒரு நடிகரின் தள்ளாடிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என பேசியுள்ளார்.
அதற்கு அ.தி.மு.க.வினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது ஒருகட்சி, இதுக்கு ஒரு கூட்டணி. கலைஞர் வீட்டிற்கு சென்று முதன் முதலாக நான் தான் கூட்டணி அமைத்தேன். ஒரு மணி நேரத்தில் 31 தொகுதி என முடிவாகி இருவரும் கையெழுத்திட்டோம். காங்கிரஸ் கட்சிக்காக ஒரு தொகுதியை தியாகம் செய்தோம். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மூன்றாவது பெரிய கட்சியாக பலம் பொருந்திய கூட்டணியாக திகழ்கிறது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக