தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடம் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அவரது அறிவிப்பை இன்று சட்டசபைக்கு வந்து இருந்த அனைத்து கட்சியினரும் வரவேற்றனர். இதனை அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.கலையரசும் வரவேற்று பேசினார்.
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை: பாமக சட்டமன்ற உறுப்பினர் எம்.கலையரசு வரவேற்பு
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011
| நேரம் வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011 0 கருத்துகள்

லேபிள்கள்:
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,
எம்.கலையரசு,
பாட்டாளி மக்கள் கட்சி
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் ம.கலையரசுக்கு பாராட்டு விழா

அணைக்கட்டு:
ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ம.கலையரசு, சட்டப்பேரவைத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையொட்டி, கலையரசுவின் நண்பர்கள் கண்ணமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவை நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவில் கண்ணமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற எஸ்.நித்யா, எஸ்.வினிதா ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசை அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசு வழங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரங்க.வேலு, மேற்கு ஆரணி ஒன்றியக் குழு துணைத் தலைவர் வெள்ளை கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஆ.வேலாயுதம், பாமக முன்னாள் மாவட்டச் செயலர் சி.கைலாசம், பேராசிரியர் கு.சிவா, எல்ஐசி முகவர் தரணி, பேரூராட்சித் துணைத் தலைவர் கோவர்தனன், காட்டுகாநல்லூர் ஊராட்சித் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
புதன், ஜூலை 06, 2011
| நேரம் புதன், ஜூலை 06, 2011 0 கருத்துகள்

லேபிள்கள்:
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,
எம்.கலையரசு,
பாராட்டு விழா
அணைக்கட்டு பகுதியில் அரசுக் கல்லூரி: அணைக்கட்டு பாமக உறுப்பினர் எம்.கலையரசு கோரிக்கை
அணைக்கட்டு பாமக உறுப்பினர் எம்.கலையரசு பேசியது
பசுமை வீடு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த வீட்டை கழிப்பறையுடன் கட்ட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு வீடுகள் கட்டப்படும், எவ்வளவு காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வரை, நோயாளிகள் பயன் பெரும் வகையில் ஏற்கனவே உள்ள கலைஞர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அணைக்கட்டு பகுதியில் அரசுக் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும். அணைக்கட்டு & வேலூர் பகுதியல் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுற்று சாலை அமைக்கவேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அணைக்கட்டு பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று பேசினார்.
லேபிள்கள்:
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,
எம்.கலையரசு
ஆற்காடு சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் இளவழகனை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்
ராணிப்பேட்டை தி.மு.க. வேட்பாளர் காந்தி, ஆற்காடு பா.ம.க. வேட்பாளர் இளவழகன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் கலையரசு ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
இதனையடுத்து விருபாட்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,
மாற்று அணி என்பது நாளுக்கு நாள் கரைந்து கொண்டு காணாமல் போய் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள ஒரு நடிகரின் தள்ளாடிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என பேசியுள்ளார்.
அதற்கு அ.தி.மு.க.வினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது ஒருகட்சி, இதுக்கு ஒரு கூட்டணி. கலைஞர் வீட்டிற்கு சென்று முதன் முதலாக நான் தான் கூட்டணி அமைத்தேன். ஒரு மணி நேரத்தில் 31 தொகுதி என முடிவாகி இருவரும் கையெழுத்திட்டோம். காங்கிரஸ் கட்சிக்காக ஒரு தொகுதியை தியாகம் செய்தோம். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மூன்றாவது பெரிய கட்சியாக பலம் பொருந்திய கூட்டணியாக திகழ்கிறது என்றார்.
இதனையடுத்து விருபாட்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,
மாற்று அணி என்பது நாளுக்கு நாள் கரைந்து கொண்டு காணாமல் போய் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள ஒரு நடிகரின் தள்ளாடிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என பேசியுள்ளார்.
அதற்கு அ.தி.மு.க.வினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது ஒருகட்சி, இதுக்கு ஒரு கூட்டணி. கலைஞர் வீட்டிற்கு சென்று முதன் முதலாக நான் தான் கூட்டணி அமைத்தேன். ஒரு மணி நேரத்தில் 31 தொகுதி என முடிவாகி இருவரும் கையெழுத்திட்டோம். காங்கிரஸ் கட்சிக்காக ஒரு தொகுதியை தியாகம் செய்தோம். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மூன்றாவது பெரிய கட்சியாக பலம் பொருந்திய கூட்டணியாக திகழ்கிறது என்றார்.
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
புதன், ஏப்ரல் 06, 2011
| நேரம் புதன், ஏப்ரல் 06, 2011 0 கருத்துகள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)